விகாரை அமைக்கும் எண்ணம் எமக்கில்லை.

ஆசிரியர் - Editor I
விகாரை அமைக்கும் எண்ணம் எமக்கில்லை.

யாழ்.நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதியின் பூதவுடன் தகனம் செய்யப்பட்ட இடத் தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை. என கூறியிரு க்கும் நாக விகாரையின் தற்போதைய விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் கூறியிருக்கின்றார்.

நாக விகாரையின் விகாராதிபதி மடிகே பஞ்ஞாசீக மகா நாயக்க தேரர் இறைபதம் அடை ந்ததை தொடர்ந்து அவருடைய உடல் கடந்த 22ம் திகதி முற்றவெளி மைதானத்தில் நi டபெற்றிருந்தது. இதனை தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்ட விமர்

சனங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்.நாகவிகா ரையில் நடைபெற்றிருந்தது. இதன்போதே ஸ்ரீ விமல தேரர் மேற்கண்டவாறு கூறியு ள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செ

ய்வது தொடர்பாக யாழ்.மாநகர சபைiயிடம் கேட்டிருந்தோம். அவர்கள் அந்த இடம் தம க்கு சொந்தமானது அல்ல என கூறியதுடன் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமா ன காணியே என சொன்னார்கள். பின்னர் தொல்லியல் திணைக்களத்தை சந்தித்து அ

னுமதியை பெற்றிருந்தோம். தகன கிரியை நிறைவடைந்த பின்னர் வடமாகாண முதலமை ச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறினார் இந்து கோ விலுக்கு அருகில் தகனம் செய்யப்பட்டமையினாலேயே பிரச்சினை எழுந்தது என கூறி

னார். இந்த விடயத்தை முன்னதாகவே கூறியிருந்தால் நாங்கள் கோவில் நிர்வாகத்துட ன் பேசியிருப்போம். மேலும் விகாராதிபதி ஒருவர் இறந்தால் அவருடைய உடல் பொது இ டத்திலேயே தகனம் செய்யப்படும் என்பது முதலமைச்சருக்கு தெரியும். இதேபோல் த

கன கிரியையில் இராணுவம் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டமை தொடர்பாகவும் ஊ டகங்கள் வாயிலாக விமர்சனங்கள் எழுந்தது. பொதுவாக விகாராதிபதி ஒருவர் இறந்தா ல் அவருடைய இறுதி சடங்கில் பௌத்தர்கள் பலர் கலந்து கொள்வார்கள். ஆனால்

இங்கே பௌத்தர்கள் இல்லை. ஆகவே பௌத்தர்கள் என்ற வகையில் இராணுவத்தின ரும், பொலிஸாரும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் சிலர் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக நாக விகாரையை இழுத்து இனவாதமாகவும், மதவாதமாகவும்

பேசுகிறார்கள். ஆனால் நாக விகாரை இனவாதம், மதவாதம் பரப்பும் இடமல்ல. அது இ னங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உண்டாக்கும் பாலமாகும். அதனை விட பெருமளவில் சமூக சேவைகளை செய்யும் இ

டமாகவும் உள்ளது. எனவே முற்றவெளி மைதானத்தில் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுதூபி அல்லது விகாரை அமைக்கும் எண்ணம் எமக்கு இல் லை என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு