6 பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த அபலை தாய்..

ஆசிரியர் - Editor I
6 பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த அபலை தாய்..

கணவனின் மிருகத்தனமான தாக்குதலை தாங்க முடியாமல் 37 வயதான குடும்ப பெண் 6 பிள்ளைகளுடன் யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளாா். 

தென்­ம­ராட்சி கிழக்­குப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த குறித்த பெண் தனது கண­வன் தின­மும் மது அருந்­தி­விட்டு வந்து தன்­னை­யும் பிள்­ளை­க­ளை­யும் தாக்­கு­வ­தால் தமக்கு பாது­காப்பு வழங்­கு­மாறு பொலி­ஸா­ரைக் கோரியுள்ளார்.

இது­ தொ­டர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலி­ஸார் ஆறு­பிள்­ளை­க­ளை­யும் தாயை­யும் சிகிச்சைக்காக சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­துள்­ள­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு