வாடஸ்அப்பில் புதிய வசதி! உரையாடல் குழுவை நீங்களே தீர்மானிக்கலாம்

ஆசிரியர் - Admin
வாடஸ்அப்பில் புதிய வசதி! உரையாடல் குழுவை நீங்களே தீர்மானிக்கலாம்

வாட்ஸ்அப் உரையாடல் குழுவில் யார் தங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை வாடிக்கையாளர்கள் இனி முடிவுசெய்யலாம்.

உரையாடல் குழுவில் ஒருவரைச் சேர்க்கும்முன்னர், அவரைக் குழுவில் இணைப்பதற்கான அழைப்பை வாடஸ்அப் தனிப்பட்ட முறையில் அந்த நபருக்கு அனுப்பும். அந்த அழைப்பு மூன்று நாள்களுக்குள் காலாவதியாகிவிடும்.

உரையாடல் குழுவில் சேர்வது சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்தைப் பொறுத்தது.  வாட்ஸ்அப் சேவை தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியாக இந்தப் புதிய நடவடிக்கை அமைகிறது.

புதிய செட்டிங்களை செயல்படுத்தும் போது யார் உங்களை குழுக்களில் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.

இதனை செயல்படுத்த உங்கள் பிரைவசி க்ரூப்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்து நோபடி (Nobody), மை காண்டாக்ட்ஸ் (My Contacts) அல்லது எவ்ரிவொன் (Everyone) என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

இவற்றில் நோபடி ஆப்ஷனை தேர்வு செய்யும் போது நீங்கள் இணைக்கப்படும் க்ரூப்களில் நீங்கள் அனுமதியளித்தால் சேர்ந்து கொள்ளலாம். மை காண்டாக்ட்ஸ் ஆப்ஷன் உங்களது காண்டாக்ட்களில் இருப்பவர் மட்டுமே உங்களை க்ரூப்களில் சேர்க்கும் வசதியை வழங்கும். 

இதுபோன்ற சமயங்களில் உங்களை க்ரூப்பில் சேர்க்க முயன்றவருக்கு, தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கக் கோரப்படும். பயனருக்கு வரும் இன்வைட்களுக்கு பதில் அளிக்க மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதன் பின் இன்வைட் காலாவதியாகிவிடும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு