இளைஞனுக்கு எமனாக வந்த பட்டம்! யாழில் சம்பவம் -

ஆசிரியர் - Editor II
இளைஞனுக்கு எமனாக வந்த பட்டம்! யாழில் சம்பவம் -

யாழ். புத்தூர் - மீசாலை பகுதியில் பட்டம் விட்ட இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் புத்தூர் கிழக்கு பகுதியினை சேர்ந்த 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நண்பர்களுடன் இணைந்து இன்று மாலை பட்டம் விட்டுக்கொண்டிருந்ததாகவும், இரவு நேரம் தொடர்ந்தும் இருப்பதற்காக வேண்டி பட்டத்தில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருந்தாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில், பட்டத்தின் வாலில் பொருத்தப்பட்டிருந்த வயர் அந்த பகுதியில் உள்ள வீதியால் சென்ற உயர் மின் அழுத்த பிரதான வடத்தில் உரசுண்டதால் குறித்த இளைஞனை மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனையடுத்து, சக நண்பர்கள் அந்த இளைஞனை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது குறித்த இளைஞன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நேற்று மாலை உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.<

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு