இலங்கை மக்களுக்கான எச்சாிக்கை..! புகைரத சேவைகள் அனைத்தும் இன்று நள்ளிரவுடன் முடக்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor I
இலங்கை மக்களுக்கான எச்சாிக்கை..! புகைரத சேவைகள் அனைத்தும் இன்று நள்ளிரவுடன் முடக்கப்படுகிறது.

இன்று நள்ளிரவு தொடக்கம் இலங்கை புகரைத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளா்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கவுள்ளனா். 

இதனால் வேலை மற்றும் பாடசாலைக்கு செல்வதற்காக புகையிரதங்களில் பயணம் செய்யும் மக்கள் சிக்க லை எதிர்கொள்வார்கள் என சமூகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், புகையிரத நிர்வாக பிரச்சினையை முன்னிறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாதியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறை போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்ந்து வரும் நிலையில் வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு