அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சா்களை கசக்கி பிழிந்த ஜனாதிபதி, ஆட்சியை கவிழ்ப்பேன் என எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சா்களை கசக்கி பிழிந்த ஜனாதிபதி, ஆட்சியை கவிழ்ப்பேன் என எச்சாிக்கை..

இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலமை காரணமாக ஆட்சி கவிழ்க்கப்படும். என ஜ னாதிபதி மைத்திாிபால சிறிசேனா எச்சாிக்கை விடுத்துள்ளனா். 

ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர்களை கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் அமுலாகும் மின்சார விநியோகத் தடை தொடர்பில், கடுமையாக விமர்சிக்கும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், மக்கள் அரசாங்கத்தை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இப்படியே சென்றால் விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு குழுவொன் றை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு