நுவரேலியாவிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த பேருந்து விபத்து, 2 போ் உயிாிழப்பு 59போ் படுகாயம், பலா் கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
நுவரேலியாவிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த பேருந்து விபத்து, 2 போ் உயிாிழப்பு 59போ் படுகாயம், பலா் கவலைக்கிடம்..

நுவரெலியா- மாஹாவாபத்தன பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவா் உயிாிழந்துள்ளதுடன், 59 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற னா். 

நுவரெலியாவிலிருந்து நுவரெலியா வலப்பனை வழியாக அம்பாறை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. அம்பாறை பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியாவிற்கு சென்று, மீண்டும் அம்பாறை செல்லும் வழியிலேயே குறித்த பஸ், 

நேற்றிரவு 7 மணியளவில் மாஹாஊவாபத்தன எனும் இடத்தில் பாரிய வளைவு பகுதியில் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது, பஸ்ஸில் பயணித்த 61 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து அணைவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதன்போது வலப்பனை வைத்தியசாலையில் வைத்து 28 வயது மதிக்கதக்க 

அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, நுவரெலியா வைத்தியசாலையில் வைத்து கர்ப்பணி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கவலைக்கிடமாக இருந்த சிலரை கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே குறித்த பாரிய வளைவு பகுதியில் பஸ்ஸை செலுத்த முடியாததன் காரணமாகவே, இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதோடு, 

சிலர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், சிலர் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மற்றும் வலப்பனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் வலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு