இலங்கை மின்சாரசபையின் புதிய அறிவிப்பு, ஞாயிற்று கிழமைகளில் மின்வெட்டு இல்லை..

ஆசிரியர் - Editor I
இலங்கை மின்சாரசபையின் புதிய அறிவிப்பு, ஞாயிற்று கிழமைகளில் மின்வெட்டு இல்லை..

இலங்கை பூராகவும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், ஞாயிற்று கிழமைகளில் மட்டும் மி ன்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாதெனவும், சனிக்கிழமைகளில் 2 மணித்தியாலங்கள் மட்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் மின்சாரசபை அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில் சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் முற்பகல் 10.45 மணிவரை அல்லது முற்பகல் 10.45 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை அல்லது பிற்பகல் ஒரு மணி தொடக்கம் பிற்பகல் 3.15 மணிவரை அல்லது பிற்பகல் 3.15 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

சனிக்கிழமை இரவு மின்வெட்டு இல்லை என்றும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு