தமிழீழ விடுதலை புலிகளின் பெயரையும், ஆயுதங்களையும் பயன்படுத்தியே சுமந்திரனை கொல்ல சதி, அம்பலமாகும் அதிா்ச்சி தகவல்கள்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் பெயரையும், ஆயுதங்களையும் பயன்படுத்தியே சுமந்திரனை கொல்ல சதி, அம்பலமாகும் அதிா்ச்சி தகவல்கள்..

தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்களை தோண்டி எடுத்து அதனை தென்னிலங் கையில் உள்ளவா்களுக்கு விற்பனை செய்தவா்கள் தொடா்பான தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் விற்பனை செய்யப்படும் ஆயுதங்களை பயன்படுத்தி படுகொலைகளை செய்யவும் சதி நடந்துள்ளது. 

தமிழீழ விடுதலை புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தின் போது புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரணகளில் தமிழ் அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி தொடர்பிலும் 

தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சி.சி.டி எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த கொலை சதி குறித்து தகவல்கள்வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித் துள்ளது. புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடி கண்டுப்பிடித்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் 

இடம்பெறும் விசேட விசாரணைகளில் இதுவரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 90 நாட்கள் தடுப்பு காவலின் கீழ் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு