வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.30  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிரதேசத்தில்: 

இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை யாழ்.குப்பிழான், ஏழாலை, கட்டுவன், சூராவத்தை, மயிலங்காடு, ஊரெழு, சுன்னாகம் சிவன் கோயிலடிப் பிரதேசம், சுன்னாகம் இலங்கை தொலைத் தொடர்பு நிலையம், ரொட்டியாலடி, அம்பலவாணர் வீதி, பெரியமதவடி, இலங்கை வங்கி முன் ஒழுங்கை, மாசியப்பட்டி, பெருமாள் கடவை, கந்தரோடை , மருதனார்மடம், மருதனார்மடம் யாழ்.நுண்கலைப்பீடம், சண்டிலிப்பாய் ஆலங்குளாய், உடுவில் ஆர்க் வீதி ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.    

இதேவேளை, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான மின்தடை வழமை போன்று அமுலிலிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு