மோசமான கொலையாளியை ஜனாதிபதி ஆக்கும் அளவுக்கு மக்கள் முட்டாள்கள் இல்லை..

ஆசிரியர் - Editor I
மோசமான கொலையாளியை ஜனாதிபதி ஆக்கும் அளவுக்கு மக்கள் முட்டாள்கள் இல்லை..

மோசமான கொலையாளியான கோட்டாபாய ராஜபக்ஸவை ஜனாதிபதி ஆக்கும் அளவுக்கு இலங்கை மக்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. என இலங்கை சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளா் விக்கிரமபாகு கரு ணாரத்ன கூறியுள்ளாா். 

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தொிவிக் கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யுத்தக் காலத்தில் கோத்தபாய பயனற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் 

நாட்டில் பல கொலைகளை செய்தார் என்பதற்கான சாட்சிகளும் இருக்கின்ற நிலையில் இவ்வாறான கொலை க் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என நான் நம்பவில்லை. மேலும் இதுபோன்ற ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கும் அளவுக்கு நாட்டு மக்களும் முட்டாள்கள் இல்லை.

கோத்தபாயவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களமிறக்கினால், அந்தக் கட்சிக்கு இருக்கும் வாக்குகள் கூட கிடைக்காமல் போய்விடும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினை இன்னும் நீடித்து வருவதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 

இந்தக் கூட்டணி தொடர்பாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு