நீதிமன்றின் முன்னால் கழுத்தை அறுத்த நபா், வவுனியாவில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றின் முன்னால் கழுத்தை அறுத்த நபா், வவுனியாவில் பரபரப்பு..

நீதிமன்றில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்ட நபா் நீதிமன்றத்தின் முன்னால் த னது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நேற்று வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

வவுனியா நீதிமன்றிற்கு வழக்கு நடவடிக்கைகளிற்காக சென்றநபர் ஒருவர் நேற்றையதினம் நீதி மன்றின் நடவடிக்கைக்கு குழப்பத்தை விளைவித்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் 

அவருக்கு  ஆறுமாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்பளிக்கபட்டுள்ளது. இதன் நிமித்தம் பொலிசாரால் அவர் நீதிமன்ற கூண்டுக்குள் அடைக்கபட்டார். 

இதன்போது  தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். காயமடைந்தவரை மீட்ட பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு