புத்தளம் - பாலாவி, நாவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமுற்ற சிறுமி மரணம்!

ஆசிரியர் - Admin
புத்தளம் - பாலாவி, நாவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமுற்ற சிறுமி மரணம்!

புத்தளம் - பாலாவி, நாவில்லு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - பிரான்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற வான் எதிர்த் திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. 

இந்த விபத்தில் குறித்த வானில் பயணித்த சாரதி உட்பட பத்து பேருடன், வீதியோரத்தில் நின்ற மற்றுமொரு லொறியின் சாரதியொருவரும் பாடுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் வானில் பயணித்த கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பெண்களும், வீதியோரத்தில் நின்ற லொறியின் சாரதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எழுவரில் ஆண்கள் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்கு ஆண்களும், சிறுமி ஒருவரும் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையிலேயே சிறுமி மரணமானார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு