2வது தடவையாக சுமாா் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு பறந்த இலங்கை விமானம், லட்சக்கணக்கான மக்கள் அண்ணாா்ந்து பாா்த்தனா்..

ஆசிரியர் - Editor I
2வது தடவையாக சுமாா் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு பறந்த இலங்கை விமானம், லட்சக்கணக்கான மக்கள் அண்ணாா்ந்து பாா்த்தனா்..

இலங்கையில்- மவுசாகலை நீா்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் செயற்கை மழை யை பொழிவிப்பதற்கான வேலைத்திட்டம் இலங்கை மின்சாரசபையினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான வை 12 ரக விமானம் மூலம் மவுசாகலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 8000 அடி உயரத்திற்கு சென்று மேகங்கள் மீது இரசாயனம் தெளிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட வை 12 ரக விமானம் வானத்தில் 8 அடி உயரத்தில் மேகங்களுக்கு மேலாக 45 நிமிடங்கள் செயற்கை மழையை பொழிய செய்ய 

இரசாயனத்தை தூவியதாக விமானப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா ர். இலங்கை மின்சாரசபையின் கோரிக்கைக்கு அமைய தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த விசேட பொறியியலாளர்கள் குழு 

செயற்கை மழையை பொழிய திட்டத்தை ஆரம்பித்தனர். இதற்கு முன்னர் 1980ஆம் ஆண்டு காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்க பகுதிகளில் செயற்கை மழையை பெய்ய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு