விடுதலை புலிகளின் ஆவணங்கள், ஆயுதங்களை தேடிய பொலிஸாாிடம் முக்கிய ஆதாரம் சிக்கியதாம்..

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகளின் ஆவணங்கள், ஆயுதங்களை தேடிய பொலிஸாாிடம் முக்கிய ஆதாரம் சிக்கியதாம்..

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நேற்று பெருமெடுப்பில் தேடுதல் வேட்டை ஒன்று நடாத்தப்பட்டது. தமிழீழ விடுதலை புலிகளின் தங்கம், ஆயுதங்கள் ம ற்றும் ஆவணங்களை தேடியே இந்த ஆய்வு நடாத்தப்பட்டது. 

ஆனாலும் பொலிஸாா் இலக்குவைத்து தேடிய பொருட்கள் எவையும் மீட்கப்பட்டிருக்க வில்லை. ஆனாலும் பொலிஸாா் தோண்டிய குழியில் முன்னா் புதையல் இருந்தது. பி ன்னா் அது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது தொியவந்துள்ளது. 

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வீடு ஒன்றில் விடுதலைப்புலிகளின் தங்க நகை கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் வீட்டிற்கு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய முல் லைத்தீவு பொலீசார், சிறப்பு அதிரடிப்படையினர்,

தொல்பொருள் திணைக்களத்தினர்,மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் ஆகியோர் சென்று வீட்டின் அறை ஒன்றினை தோண்டியுள்ளார்கள். குறித்த அறைபகுதியில் இருந்து போ ர் நடைபெற்ற காலத்தின் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் 

தடையங்களையே மீட்டுள்ளதுடன் அங்கு எதுவித தங்க ஆபரணங்களும் மீட்கப்படவி ல்லை. இந்த மீட்பு நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட தடையங்களில் ஒன்றான 20 11 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு ரூபா நாணயக்குத்தி ஒன்று

இனம் காணப்பட்டுள்ளது ஆகவே குறித்த பகுதி ஏற்கனவே தோண்டப்பட்டு மூடப்பட் டுள்ளதாக அங்கு வந்தவர்கள் கருதியதை தொடர்ந்து எதுவும் கிடைக்காத நிலையில் தோண்டிய பகுதியினை மூடிவிட்டு சென்றுள்ளார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு