வாக்கெடுப்பின்றி மீண்டும் நிறைவேறியது ஜெனிவா தீர்மானம்!

ஆசிரியர் - Admin
வாக்கெடுப்பின்றி மீண்டும் நிறைவேறியது ஜெனிவா தீர்மானம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் சற்று முன்னர் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பிரித்தானியா, அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த தீர்மானத்தை முன்வைத்திருந்தன.

இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பதிலளித்து உரையாற்றினார். 

அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு