கிழக்கில் பூரண ஹர்த்தால், கண்ணீருடன் கல்லடி பாலத்தில் நிறையும் மக்கள். கிழக்கு சோகமயம்..

ஆசிரியர் - Editor I
கிழக்கில் பூரண ஹர்த்தால், கண்ணீருடன் கல்லடி பாலத்தில் நிறையும் மக்கள். கிழக்கு சோகமயம்..

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டாத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று கிழக்கு மாகாணத் தில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்தமா க இருந்துவரும் நிலையில்  வடகிழக்கு மாகாணத்தி ல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுனர்கள் ஒன்றிணைந்து பாரிய மக்கள் போராட்டம் ஒன்றாக்கும் கதவடைப்புக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். 

இந்நிலையில் இன்று கி ழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப் பட்டுள்ளது. 

மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப் பட்டு ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது.இதேவே ளை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிவேண்டி கல்லடி பாலத்தில் மக்கள் குவிந்து கொண்டிருக்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு