தனியாா் நிறுவத்தில் 2 கோடிக்கும் மேல் பணம் மோசடி, முறைப்பாடு கொடுக்க சென்றவா்களை திருப்பி அனுப்பிய பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
தனியாா் நிறுவத்தில் 2 கோடிக்கும் மேல் பணம் மோசடி, முறைப்பாடு கொடுக்க சென்றவா்களை திருப்பி அனுப்பிய பொலிஸாா்..

யாழ்.நகாில் இயங்கும் விமான பயணச்சீட்டு வழங்கும் நிறுவனத்தில் இடம்பெற்ற பா   ாிய நிதி மோசடி தொடா்பாக முறைப்பாடு கொடுக்க சென்றவா்களை பொலிஸாா் தி ருப்பி அனுப்பியுள்ளனா். 

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிரா கவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர். அந்த நிறுவனத்தில் வெளிநாடு களுக்குப் பயணிப்பதற்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு பணம் செலுத்தி முற்பதிவு செய்துள்ளனர். 

எனினும் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது போலி விமான பயணச் சிட்டை என அவர்கள் பின்னரே அறிந்துள்ளனர். அதுதொடர்பில் அந்த நிறுவனத்தை நாடிய போது, அதன் முகாமையாளர் இல்லை என அங்கு பணியாற்றிய பெண் பணியாளர் 

ஒருவர் தெரிவித்து வந்துள்ளார். முகாமையாளர் வந்ததால்தான் பணத்தை மீள வழ ங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிலர் கட்டுநாயக்க விமான நிலையத் துக்குச் சென்று போலி விமானச் சிட்டை எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முறை ப்பாடு வழங்க இன்றைய தினம் சென்றனர். அவர்களுடன் அந்த நிறுவனத்தில் முதலீ டு செய்துள்ள பங்காளர் எனத் தெரிவித்த ஒருவரும்

தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்றார். பாதிக்கப்பட்டவர்க ளால் பயண முகவர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பணியாளரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார். 

அத்துடன், அந்த நிறுவனத்தின் உதவி முகாமையாளர் எனத் தெரிவித்த ஒருவரும் வருகை தந்திருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலி ஸார், பாதிக்கப்பட்டவர்களை நாளை மு.ப. 10 மணிக்கு 

முறைப்பாடு வழங்க வருமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு