கட்டமைப்புசாா் இன அழிப்பு தொடா்பில் ஆதாரங்களுடன் கூடிய அறிக்கை ஐ.நாவில் சமா்ப்பிப்பு..

ஆசிரியர் - Editor I
கட்டமைப்புசாா் இன அழிப்பு தொடா்பில் ஆதாரங்களுடன் கூடிய அறிக்கை ஐ.நாவில் சமா்ப்பிப்பு..

போருக்கு பின்னா் வடகிழக்கில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கட்டமைப்பு சாா் இன அழிப்பு தொடா்பான ஆதரங்களுடன் அறிக்கை ஒன்றிணை தமிழா் மரபுாிமை பேர வை ஐ.நா மனித உாிமை பேரவையில் சமா்பிக்கப்பட்டுள்ளது. 

இக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக சென்றுள்ள இணைத்தலைவர் வி.நவநீதன் அவர்களால் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் 11/03 /2019 அன்று சமர்ப்பிக்கப்பட்டது .

இவ்வறிக்கையில் மகாவலி அபிவிருத்தி திட்டமூடாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் ,தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள் ளப்படும் பௌத்த மயமாக்கல்கள்,

வனவளபாதுகாப்பு திணைக்களம் ,வனைஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக காணிகள் அபகரிக்கப்பட்டு தமிழ் மக்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களுடன் கூடிய அறிக்கை 

ஐ.நா விற்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து பக்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளதுடன் எதிர்வரும் 20ம் திகதி நடைபெற உள்ள மனித உரிமை பேரவையின் பிரதான கூட்டத்தொடரிலும் 

உரையாற்ற உள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு