வடமாகாணம் பூராகவும் திங்களன்று ஹா்த்தால், சகல தரப்பினரும் ஒத்துழைப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் பூராகவும் திங்களன்று ஹா்த்தால், சகல தரப்பினரும் ஒத்துழைப்பு..

வடமாகாணம் பூராகவும் நாளை மறுதினம் ஹா்த்தால் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், காணா மல் ஆக்கப்பட்டோாின் உறவுகளுடைய ஒழுக்கமைப்பில் இந்த ஹா்த்தால் அனுட்டிக்கப்படவுள்ள தாகவும், வடமாகாணம் பூரணமாக முடங்கும் எனவும் கூறப்படுகின்றது. 

இந்­தப் போராட்­டத்­துக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஜன­நா­ யக மக்­கள் முன்­னணி, சமத்­து­வம் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்பு, 

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­க­ளது முழு­ மை­யான – தார்­மீக ஆத­ரவை வழங்­கி­யுள்­ளன. காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் தமது தொடர் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டு­கள் நிறை­வ­டை­வதை முன்­னிட்­டும், 

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை அமர்வை இலக்கு வைத்­தும், நாளை மறு­தி­னம் திங்­கட் கிழமை வடக்கு மாகாணம் தழு­விய முழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு அறை­கூ­வல் விடுத்­துள்­ள­னர். அன்­றைய தினம் கிளி­நொச்சி நக­ரில் காலை கவ­ன­வீர்ப்­புப் போராட்­ட­மும் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­தப் போராட்­டத்­துக்கு அர­சி­யல் கட்­சி­கள், பொது அமைப்­புக்­கள், ஒன்­றி­யங்­கள், சிவில் சமூக அமைப்­புக்­கள் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­கள் ஆத­ரவை வழங்­கி­யுள்­ளார்­கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு