பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது

ஆசிரியர் - Admin
பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது

பிரான்ஸில் இருந்து இன்று நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

64 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில் அவர்களில் 54 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 4 சிறுவர்களும் அடங்கும்.

இவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே அதிகம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களும் அடங்கும்.

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் செல்லும் நோக்கில் ரீயூனியன் தீவினை சென்றடைந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக ரீயூனியன் தீவிற்கு சென்று, பிரான்ஸிற்குள் நுழைந்திருந்த சந்தர்ப்பத்தில், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸிற்கு சொந்தமான போயிங் 737 - 800 ரக விசேட ரக விமானம் ஊடாக இன்று பிற்பகல் 2.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

குறித்த விமானத்தில் பிரானஸ் நாட்டு 70 அதிகாரிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் மாலை 4.30 மணியளவில் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நோக்கி சென்றுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, குற்ற விசாரணை பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு