கொழும்பு சென்ற பேருந்தின் மீது செம்மணி பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்..
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அன்னை முத்துமாரி பயணிகள் பஸ் மீது விசமிகளால் கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது.
இன்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பஸ்சின் முன் கண்ணாடி சேதமடைந்தது.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த பஸ்சின் மீது செம்மணி வீதியில் வைத்து கல் எறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போட்டி காரணமாக இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என்று பஸ் காரர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பஸ் வீதியில் நீண்ட நேரம் தொடர்ந்து பயணிக்காமல் நின்றதால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.