வடமாகாண விவசாயிகளுக்கு இன்ப அதிா்ச்சி கொடுத்த, ஜனாதிபதி மற்றும் ஆளுநா்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண விவசாயிகளுக்கு இன்ப அதிா்ச்சி கொடுத்த, ஜனாதிபதி மற்றும் ஆளுநா்..

வடக்கு மாகாணம் மற்றும் நாடு முழுவதும் உருளைக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபடும் விவ சாயிகளின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் விளைச்சல் காலத்தில் உருளைக்கிழங்கு க்கான இறக்குமதி வரியினை அதிகரிக்கக்கோரி.

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் முன்வைத்த கோரிக்கையினை, ஆளுநர் அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கமைய 

உடனடியாகவே உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியினை 20 ரூபாவிலிருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்குமாறு விவசாய அமைச்சர் பி.ஹரிசனுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதன் பிரகாரம் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 

2019.02.01 இலிருந்து அமுலுக்கு வரும்வகையில் 20 ரூபாவிலிருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு