வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டவா்கள் வெளிநாடுகளில், மீண்டும் இலங்கைக்கு இழுத்துவரப்படுவாா்கள்..

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டவா்கள் வெளிநாடுகளில், மீண்டும் இலங்கைக்கு இழுத்துவரப்படுவாா்கள்..

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவா்கள் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்படுவாா்கள் என கூறியிருக்கும் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபா் றொஷாந்த பொ்ணான்டோ, நடவடிக்கை துாிதப்படுத்தப்பட்டுள்ளதாகவு ம் கூறியுள்ளாா். 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபா்  காரியாலையத்தில் இன்று சனிக்கிழமை காலை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதி ல் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறான நபர்களை மீண்டும் நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு அந்தந்த நாட்டு அரசாங்கத்திடம் கோ ரவுள்ளோம். 

இந்நடவடிக்கை பொலிஸ்மா அதிபர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு