யாழ்.குடாநாட்டில் கேரள கஞ்சா வியாபரம், அரசியல் கட்சியின் மாவட்ட அமைப்பாளா் ஒருவரே பிரதான சூத்திரதாாி..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் கேரள கஞ்சா வியாபரம், அரசியல் கட்சியின் மாவட்ட அமைப்பாளா் ஒருவரே பிரதான சூத்திரதாாி..

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபா்களுக்கும், வல்வெட் டித்துறையில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவா்களுக்கும் இடையில் நெருங்கிய தொடா்புள் ளதாக நீதிமன்றில் கூறியிருக்கும் பொலிஸாா், 

அரசியல் கட்சி ஒன்றின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வா்த்தகருமான ஒருவரே யாழ்.குடாநா ட்டில் கேரள கஞ்சா விற்பனையின் பிரதான நபராக செயற்படுவதாகவும், கைத செய்யப்பட்டு ள்ளவா்கள் குறித்த வா்த்தகாிடம் பணியாற்றுபவா்கள் எனவும் கூறியுள்ளனா். 

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள வணக்க ஸ்தலத்திற்கு முன்பாக வைத்து 41 கிலோ 580 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். வாகனம் ஒன்றில் கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக 

வைத்திருந்த போது, கொழும்பிலிருந்து வந்த போதைப்பொருள் தடுப்புக் காவல்துறைப்பிரிவி னரே கைது செய்தனர். சந்தேகநபர்கள் இருவரையும் கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

கஞ்சா போதைப்பொருளும் ஒப்படைக்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தப்ப ட்டனர். சந்தேகநபர்களுக்கும் அண்மையில் 

வல்வெட்டித்துறையில் வைத்து 110 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தொடர்புண்டு. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கஞ்சா போதைப்பொரு ளை விற்பனை செய்யும் வலையமைப்பின் 

முக்கிய நபர் தொடர்பில் தகவல் அறிந்தே கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு சென்று  முதலாவது சந்தேகநபரைக் கைது செய்தனர். அவருடன் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுகின்றார். 

அவர் முதலாவது சந்தேநபருக்கு உதவியாளராவார். சந்தேகநபர்கள் மானிப்பாய் வீதியில் உள்ள வணக்க ஸ்தலத்தில் தங்கியிருப்பதாக தகவல் வழங்கியுள்ளனர்’ என்று காவல்துறை யி னர் சமர்ப்பணம் செய்தனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார். வழக்கை விசாரித்த மேலதி நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு