பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு தேர்வு செய்யப்பட்டது..

ஆசிரியர் - Editor I
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு தேர்வு செய்யப்பட்டது..

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று 20 நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் கோவில் வீதியிலுள்ள விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுமென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளதாகவும் இதன் போது கட்சியின் கொள்கை மற்றும் யாப்பு என்பனவும் வெளிப்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு