SuperTopAds

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த இரட்டையர்!

ஆசிரியர் - Admin
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த இரட்டையர்!

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.     

மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர். சி.ஜமுனானந்தா பிரணவன் (முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் சாதணை படைத்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நேற்று வெளியாகிய கபொத உயர்தர பெறுபேறுகளுக்கு அமைய யாழ். இந்துக்கல்லூரியில் 55 மாணவர்களும், ஹாட்லிக் கல்லூரியில் 33 மாணவர்களும் 3 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.