பொலிஸாரை கொலை செய்ய முயற்சித்த மணல் கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரை கொலை செய்ய முயற்சித்த மணல் கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்..

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற போது அவர்கள் பொலிஸாரை தாக்க முயன்றனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று இரவு ஏழு மணியளவில் தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

“கெற்பேலி கிராமத்தில் வழமை போன்று இன்று மாலை கொடிகாமம் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சட்டவிரோத மணல் ஏற்றப்பட்ட உழவியந்திரம் பயணித்தது. 

அதனைப் பொலிஸார் வழிமறித்துள்ளனர். எனினும் கடத்தல்காரர்கள் உழவியந்திரத்தால் பொலிஸாரை தாக்க முற்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் சுதாகரித்துக்கொண்டதையடுத்து உழவியந்திரத்தில் வந்த மணல் கடத்தல்காரர்கள் இருவரும் உழவியந்திரத்தை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். 

இதனையடுத்து மணலோடு உழவியந்திரம் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. தப்பிச்சென்ற கடத்தல்காரர்களை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு