இராணுவ வாகனம் மோதி 3 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே பலி.. இயக்கச்சியில் சோகம்.

ஆசிரியர் - Editor I
இராணுவ வாகனம் மோதி 3 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே பலி.. இயக்கச்சியில் சோகம்.

சற்று முன்னர் வெளியான விபத்து செய்தியில் முச்சக்கர வண்டியும் இராணுவ வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் இளைஞர் மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார். இச் சம்பவம் பளை இயக்கச்சி பகுதியில் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றது.

உயிரிழந்தவர்கள் மூவரும் பளை புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ஜெயக்குமார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு