யாழ்.அாியாலையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.அாியாலையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது..

யாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண பொலிசார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். 

அரியாலை பூம்புகார் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய அப்பகுதி இளைஞர் ஒருவரை தாம் சந்தேகத்தில் சோதனையிட்ட போது அவரது உடமையில் இருந்து 5 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்டதாகவும் அதனை அடுத்து இளைஞனை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு