யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளில் நாளை மின்தடை

ஆசிரியர் - Editor II
யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டில் வேம்பிராய், கல்வயல், மட்டுவில், நுணாவில் சந்தி, அல்வாய், மாலுசந்தி, வியாபாரி மூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், நாவலடி, லங்கா பாடசாலை, பருத்தித்துறை நகரம், சாரையடி, கிராமக்கோடு, கல்லூரி வீதி, VM வீதி, தம்பசிட்டி, சாளம்பை, புனிதநகர், மாதனை, கற்கோவளம், வெளிச்சவீடு, தும்பளை, வறாத்துப்பளை, திகிரி, கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, மந்திகை, காளிகோவிலடி, வதிரி, இரும்பு மதவடி, சக்களாவத்தை, தேவரையாழி, மனோகரா, திக்கம், திக்கம் சித்தி விநாயகர் கோயிலடி, மயிலிட்டி, தையிட்டி, வறுத்தலை விளான், வீமன்காமம், பலாலி, காங்கேசன்துறை, கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், மயிலிட்டி ஐந்தாவது கரிசன் பொறியியல் படை முகாம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம்(புதியது), பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு