யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அபாயகரமான வெடிபொருளுடன் சிக்கிய இளைஞன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அபாயகரமான வெடிபொருளுடன் சிக்கிய இளைஞன்..

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அபாயகரமான வெடி பொருட்களுடன் பயணிக்க தயாராக இருந்த இளைஞ ன் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகில் சி4 ரக வெடிபொருள் ஒரு கிலோவை தன்னுடன் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் பஸ் நிலையத்தில் காத்திருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.

வெடி பொருளை மூன்றாக பிரித்துஇ உணவு பொதி போன்று தயாரித்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு