வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு மக்கள் வழங்கிய மனிதநேய நிவாரண பொருட்கள் கிளிநொச்சியை வந்தடைந்தது..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு மக்கள் வழங்கிய மனிதநேய நிவாரண பொருட்கள் கிளிநொச்சியை வந்தடைந்தது..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தெற்கில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களுடன் புகைரதம் கிளிநொச்சியை வந்தடைந்துள்ளது. 

கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்த உலருணவுப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது. இந்த புகையிரதத்தில் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்

 டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து கொண்டார். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கக்பட்ட மக்களுக்கு தெற்கில் சேகரித்த உலருணவுப் பொருட்களுடன் வடக்கு உதவும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக 

ஐனாதிபதி செயலகமும், புகையிரத திணைக்களமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு