யாழ்.நீதிமன்றில் உறுதியுரை எடுத்துக் கொண்ட நீதிபதிகள், அரச ஊழியர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீதிமன்றில் உறுதியுரை எடுத்துக் கொண்ட நீதிபதிகள், அரச ஊழியர்கள்..

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிபதிகள் உட்பட உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று காலை 9 மணிக்கு உறுதியுரை எடுத்தனர்.  

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவர் வெள்ளத்தம்பி முகமெட் சியான் ஆகியோர் பங்கேற்றனர்.

தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், கணக்காளர்  வி.ரதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் நீதிபதிகள்  முன்னிலையில் உறுதியுரையை நிறைவேற்றினர். 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு