யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மீண்டும் கொள்ளையில் ஈடுபட்ட பெண் அடையாளம் காணப்பட்டாா்..
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த நோயாளியிடம் சங்கிலியை திருடிய குற்றச் நாட்டில் இம் மாதம் ஆரம்பத்தில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் மீண்டும் நேற்று முன் தினம் அதேபாணியில் ஓர் வயோதிபத் தாயின் 2 பவுன் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்று ள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த வயோதிபத் தாயாரிடம் ஓர் த ங்க ஆபரணத்தை திருடிய குற்றச் சாட்டில் மறைகாணி ஒளி நாடாவின் உதவியுடன் டிசம்பர் 4ம் திகதி வைத்தியசாலையில் நூதனமான திருட்டுக்களுல் ஈடுபடும் சில இளம் பெண்களில் மறைகாணி உதவியுடனும் நேரடியாகவும் அகப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் அதற்கு முன்பும் திருட்டில் ஈடுபட்ட ஒளிநாடா ஆதாரத்து டனேயே பொலிசாரிடம் ஒப்படைந்திருந்தோம். இதன்போது பல திருட்டில் ஈடுபட்டதனை ஒப்புக் கொண்டவேளையில் பல நாட்களாக நோயாளிகளிடம் ஏமாற்றி தங்க நகைகளை அபகரித்து இ வ்வாறு கையும் மெய்யுமாக பிடித்தோம்.
அதே பெண் முதல்நாள் இன்னுமோர் தாயாரிடம் தங்க நகை அபகரித்துச் சென்ற ஆதாரங்களும் இருந்தன . இவ்வாறு ஓர் கைக் குழந்தையுடன் பிடிபட்ட பெண் முல்லைத்தீவு அளம்பிலைச் சேர்ந்த இவர் மீண்டும் தற்போது அதே உடைநுடன் கடந்த இரு நாட்களின் முன்பு வைத்தியசாலைக்கு வந்த வயோதிபத் தாயாரை ஏமாற்றி
2 பவுன் தங்க நகையை அபகரித்துச் சென்றுள்ளார். அதாவது தனது சங்கிலியை ஒருவர் ஏமாற்று அறுத்துச் சென்றுவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் செய்த முறைப்பாட்டினை பிரகாரம் மறைகாணியை பரிசோதித்த நிலையிலேயே மேற்படி விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குறித்த விடயம் தொடர்பில் சகல விடயங்களும்
யாழ்ப்பாணம் மீண்டும் பொலிசாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.