தன்னை தானே பிளேட்டால் வெட்டிய இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
தன்னை தானே பிளேட்டால் வெட்டிய இளைஞன் கைது..

தன்னை தானே பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தினார் என இளைஞர் ஒருவரை காங்கேசன்துறை பொலிசார் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். 

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இச் சம்பவம் இடபெற்று உள்ளது.அது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

வலி.வடக்கு வீமன் காமத்தை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் நேற்று மாலை கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் தனது முறைப்பாட்டினை பதிவு செய்து கொண்டிருந்த வேளை ,அங்கு வந்த அவரது கணவர் தன்னுடன் மனைவியை அழைத்து செல்ல முயன்றுள்ளார். அதன் போது இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. 

அதனால் கணவரை பொலிசார் கைது செய்ய முயன்ற போது தான் மறைத்து வைத்திருந்த பிளேட்டினை எடுத்து தனது வயிற்று பகுதியில் கீறியுள்ளார். அதனை அடுத்து அவரை மீட்ட 

பொலிசார் சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு