வடமாராட்சி கிழக்கு கடற்கரையில் கரையாதுங்கிய மர்மப் பொருள்! மீனவர்கள் மத்தியில் குழப்ப நிலை!!!
வடமாராட்சி கிழக்கு ஆளியவளை கடற்கரையில் இன்று அதிகாலை மர்ம பொருள் கரை ஒதுங்கியதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் மர்மபொருளினை மீட்டதுடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கப்பல் ஒன்றின் உடைந்த பாகமாக இது இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் கரையொதுங்கிய மர்மபொருளினை பார்வையிட பெருந்தொகை மக்கள் கடற்கரையில் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.