கா்ப்பவதி பெண்ணை தள்ளி வீழ்த்துவிட்டு சங்கிலியை அறுத்தவா்கள் சிக்கினா்..
சாவகச்சேரியில் கடந்த 22ம் திகதி வீதியால் பயணித்த கர்ப்பவதியினை தள்ளி வீழ்த்திவிட்டு தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற கொட்டடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியில் பகல்வேளையில் வீதியால் பயணித்த கர்ப்பவதியினை காலால் உதைத்து வீழ்த்திவிட்டு 2 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிசார தீவிர விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதான மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடு சம்பவம்
இடம்பெற்றதற்கு அருகில் ஓர் வர்த்தக நிலையத்தில பொருத்தப்பட்ட மறைகாணியில் அகப்பட்டிருந்தது. அவ்வாறு அகப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் அதன்போது பெறப்பட்ட ஒளிநாடாவையும் வைத்து பொலிசார் மேலும் புலன் விசாரணையில் ஈடுபட்டனர்.
இவ்வாறு மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் குறித்த மோட்டார் சைக்கிள் கொட்டடியைச் சேர்ந்த ஒருவரது என இனம்கானப்பட்டது. அந்த முகவரியின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் இரண்டாவது நபர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளார். இதேநேரம் குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே இதேபோன்ற ஒரு சங்கிலி அறுப்புச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட நிலையில்
பொலிசாரால் கைது செய்யப்பட்டு 2 மாதம் சிறையில் இருந்த நிலையில் நீதிமன்றம் ஊடாக பிணையில் வெளிவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.