கனமழையினால் யாழ்.மாவட்டத்தில் 400 ஏக்கா் நெற்செய்கை அழிவு..

ஆசிரியர் - Editor I
கனமழையினால் யாழ்.மாவட்டத்தில் 400 ஏக்கா் நெற்செய்கை அழிவு..

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கடும் மழை காரணமாக 400 ஏக்கர் நெற் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதாக மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அநேகமாக நல்ல நிலையிலேயே கானப்பட்டது இருப்பினும் கடந்த வாரம் ஏற்பட்ட அதிக மழையின் காரணமாக 

400 ஏக்கர் நெற் செய்கை முழுமையாக  100 வீதம் அழிவடைந்துள்ளதோடு மேலும் 160 ஏக்கர் நெல் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இவ்வாறு அழிவைச் சந்தித்த பிரதேசங்களில் சாவகச்சேரி பகுதியிலேயே அதிக அழிவுகள் ஏற்பட்டுள்ளன. 

இவ்வாறு ஏற்பட்ட அழிவுகள் தொடர்பான விபரங்கள் தற்போதே கிடைக்கப்பெற்றுள்ளதனால் அவற்றினை நேரடியாகப் பார்வையிட்டு உறுதி செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளிற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. எனத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு