யாழ்.மாநகரசபை எல்லைக்குள் 672 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான சூழல் காணப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் 672 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான சூழல் காணப்படுகிறது..

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் 672 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சூழல் காணப்படுவ தாக  யாழ்.மாநகரசபை எல்லைக்குள் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ்.பிரேதச செயலகம், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, சுகாதார திணைக்களம், காவற்துறையினர், பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் போது 947 இடங்களில் சோதனையிட்டதில்இ 672 இடங்களில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழல்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து அத்தகைய இடங்களை உனடியாக துப்பரவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. 

அத்துடன் 25 இடங்களில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்டன. அதனையடுத்து 17 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களிலும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு