யாழ்.மாநகரை அழகுபடுத்தும் செயற்றிட்டம் இன்று ஆரம்பம்..
யாழ்.மாநகரை பசுமைப்படுத்தும் செயற்திட்டம் இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர மைதான வளாகத்தை அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற இந்தநிழ்வில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட்கூரே பிரதம விருந்தினராககலந்துகொண்டு
மரக்கன்றுகளை நாட்டி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். இதனடிப்படையில் இன்றையதினம் யாழ்.மாநகர மைதான வளாக பிரதான வீதிமற்றும் யாழ் துரையப்பா மைதானத்தூடா செல்லும் பண்ணை வீதி ஆகிய பிரதான வீதிகளின்
நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருமருங்கிலும் நிழல் மரங்கள்நாட்டிவைக்கப்பட்டது. யாழ்.மாநகர துணை மேயர் ஈசன் ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் யாழ்மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் மாவட்ட மேலதிக அரச அதிபர்,
இராணுவத்தினர் திணைக்களங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிழ்வில்கலந்துகொண்டிருந்தனர் இந் நிகழ்வில் கருத்து வெளியிட்ட ஆளுநர் யாழ் மாநகரை பசுமையான நகரமாகமாற்றுகின்ற செயற்பாடுகளையே தற்போது முன்னெடுத்து வருவதாகவும்
அடுத்த வருடத்திற்குள் மாநகரம் பசுமையான நகரமாக மாற்றமடையுமெனவும்தெரிவித்திருந்தார்.