போரினால் நிர்க்கதியாகி யாசகம் கேட்கும் முதியவர்கள். மதிக்காவிட்டாலும் பரவாயில்லை.. மிதிக்காதீர்கள். துயர் மிகுந்த உண்மை கதை..

ஆசிரியர் - Editor I
போரினால் நிர்க்கதியாகி யாசகம் கேட்கும் முதியவர்கள். மதிக்காவிட்டாலும் பரவாயில்லை.. மிதிக்காதீர்கள். துயர் மிகுந்த உண்மை கதை..

எல்லாம் கடந்து போகும் என்பது போல் கடந்து போகின்றோம். அதில் எப்போதும் நாம் பாரமுகமாக கடந்து போகின்றவர்களில் வீதிகளில் அமர்ந்து யாசகம் கேட்பவர்களும் உண்டு.

வீதிகளில் யாசகம் கேட்பவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என்று எண்ணாதீர்கள். அதில் சிலர் ஒரு காலத்தில் ஓகோ என வாழ்ந்தவர்கள்.

ஒரு சிலர் நமக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஒரு சிலர் தாம் பெற்ற பிள்ளைகளை ஈழப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்கள்.

மௌனிக்கப்பட்ட யுத்தம் அவர்களை நம்மிடம் கையேந்த வைத்து விட்டது. அவர்களில் சிலர் நாம் அருகில் சென்றதும் கை நீட்டி யாசகம் கேட்கின்றனர்.

நம்மில் எத்தனை பேர் அவர்களை திரும்பி பார்க்கின்றோம். உதவ நினைக்கின்றோம். ஒரு சில நபர்களே அவ்வாறு அதிகம்.

மக்கள் புளக்கம் உள்ள இடங்களில் அமர்ந்தால் ஒரு வேளை உணவுக்காவது உதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் வெயில் என்றும் மழை என்றும் பாராது 

மன்னார் நகர மத்தியிலும் வீதி நடை பாதைகளிலும் வீதி சுற்று வட்டங்களிளும் காத்திருக்கும் ஏழைகளுக்கு எப்போதுமே ஏமாற்றமே மீதமாகின்றது.

அவசர உலகில் நிற்க கூட நேரம் இல்லாத மக்களை கை நீட்டுபவர்களை நிர்க்கதியாய் நிற்கவிட்டு நகர்கின்றோம். அதே போன்று கடந்து போகும் ஒரு நபருடைய கதை முல்லைத்தீவில் 

இறுதி யுத்தத்தில் நமக்காக ஒரு பிள்ளையையும் செல் குண்டுதாக்குதலில் ஒரு பிள்ளையையும் இழந்து பெற்ற மகளினால் கைவிடப்பட்டு அன்றாட உணவுக்காக கையேந்தி திரியும் 

நிர்க்கதி நிலையில் தன் மனைவியுடன் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைக்கும் ஏதோ ஒரு வகையில் நாமும் ஒரு காரணம். 

ஆனால் நாமோ கண்டு கொள்வதில்லை. தள்ளாத வயதிலும் தன் மனைவியை கூட தள்ளிவைக்காது தன்னுடனே சுமந்து செல்லும் இவ் பெரியவர் ஆயிரம் நோய்களை சுமந்து கொண்டாலும் 

மரணம் வரை கணவன் கையை கைவிடாத அந்த தாய். எப்போதும் இவர்களை இந் நிலைக்கு ஆழாக்கிய சாபம் பின் தொடரும்.

இவ்வாறானவர்களுக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை. அவர்களை உதாசீனம் செய்யாதீர்கள். ஏளனமாக பார்க்கும் உங்கள் பார்வை எப்போதும் பசியைவிட கொடுமையானது என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு