வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒருதொகுதி காணிகள் நாளை விடுவிப்பு..
யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அடங்கியிருக்கும் மக்களுக்கு சொந்தமான ஒருதொகுதி காணிகள் நாளை மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது.
மயிலிட்டி வடக்கு ஜே-246, தையிட்டி தெற்கு ஜே-250, காங்கேசன்துறை மத்தி. பலாலி தெற்கு ஒட்டகப்புலம் 511 பிரிகேட் தலைமையகத்திற்கு வடக்குப் பக்கம் விடுவிக்கப்பட்டவுள்ளது.
இதைவிட மேலும் சில இடங்களில் உள்ள காணிகளும் விடுவிக்கப்படும் என கூறப்படுகிறது எனினும் இதுகுறித்த தகவல் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.