யாழ்.வடமராட்சி கிழக்கில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பெருமளவு மக்கள் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பெருமளவு மக்கள் பாதிப்பு..

கடந்த இரு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக யாழ் வடமராட்சிக் கிழக்கு பகுதியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

உடுத்துறை, ஆழியவளை, மணற்காடு உள்ளிட்ட பகுதியில் வெள்ளப் பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அநேகமான மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இப்பகுதியில் வீதிகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பயிரிடப்பட்ட விவசாயப் பயிர்களும் முற்றாக அழிவடைந்துள்ளன.

கிராமங்களில் கடற்கரையோரமாகக் காணப்படுகின்ற வாய்க்கால் ஊடாக வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வெள்ளப்பாதிப்பை குறைக்க தொண்டமானாறு ஏரி வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு