ஏன் இப்படி...? பருத்தித்துறை - கொடிகாமம் வீதி மட்டும்.
பருத்தித்துறை - கொடிகாமம் வீதிகள் மட்டும். பார்ப்பதற்கு மட்டுமல்ல, பிரயாணிக்கும் வாகனங்களுக்கும் பொருத்தமற்றதாக இருப்பதுடன்,பிரயாணிகளும் சலிப்பையே சம்பாதித்து செல்கின்றனர் பயணத்தின் போது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கீழ் உள்ளது.
தென்மராட்சியும் வடமராட்சியையும் இணைக்கும் பிரதான வீதி இது.பெரும்பாலான பிரதான வீதிகள் அனைத்தும் சிறந்த முறையில் (காப்பற் வீதிகளாக) திருத்தப்பட்டு நிறைவுற்ற நிலையில் இந்த வீதி மட்டும் திருத்தப்படவில்லை ஏன்..?
விரைவில் திருத்தப்பட இருப்பாக பத்திரிகையில் செய்திகள் வந்த நிலையிலும் நேற்று வீதி ஏன் றிப்பியர் நடைபெறுகின்றது?
காப்பற் வீதிகளாக ஏன் திருத்தப்படவில்லை?
1) அரசியல் மாற்றமா?
2) வீதி அதிகார சபையின் கண்ணுக்கு புலப்படாத தன்மையா?
3) பிரதேச மக்களின் அசமந்தப்போக்கா?
4) வேறு காரணங்களா?