தமிழீழ விடுதலை புலிகளை பெருமைப்படுத்திவிட்டு தனது பதவியை தூக்கி எறிந்த விஜயகலா மீண்டும் அமைச்சரானார்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளை பெருமைப்படுத்திவிட்டு தனது பதவியை தூக்கி எறிந்த விஜயகலா மீண்டும் அமைச்சரானார்..

வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறவேண்டும் என கூறி சர்ச்சையை உண்டாக்கி அதனால் அமைச்சு பதவியை துறந்த திருமதி விஜயகலா மீண்டும் அமைச்சராகியுள்ளார். 

சமகால அரசாங்கத்தின் அமைச்சரவை நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. இந்நிலையில் பிரதியமைச்சர்கள்இ இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.


இதன்போது கல்வி ராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் விடுதலைப் புலிகளின் மீள் வருகையின் அவசியம் குறித்து விஜயகலா கருத்து வெளியிட்டிருந்தார்.

அவரின் கருத்து தென்னிலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்இ தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். கடந்த அரசாங்கத்தின் போது மகளிர் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு