அல்வாய் ஆலடி வைரவர் வீதியை புனரமைக்குமாறு மக்கள் சார்பாக கடிதம் மூலம் கோரிக்கை

ஆசிரியர் - Admin
அல்வாய் ஆலடி வைரவர் வீதியை புனரமைக்குமாறு மக்கள் சார்பாக கடிதம் மூலம் கோரிக்கை

அல்வாய் கிழக்கு நெடுக்கேணி ஊடாக அல்வாய் ஆலடி வைரவர் செல்லும் வீதியை புனரமைக்குமாறு மக்கள் சார்பாக இன்று  கடிதம் மூலம் கோரிக்கை மிக விரைவாக புனரமைத்து தருவதாக தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன்உறுதி  

அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்திற்கு பின் பக்கமாக செல்லும்  நெடுக்கேணி - ஆலடி வைரவர் வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் மற்றும் அல்வாய் கிழக்கு வட்டார உறுப்பினர் சஜிப் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது 

நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்து வந்த குறிந்த வீதி அப்பகுதி மக்களின் பிரதான வீதிகளில் ஒன்றாகும்  தினம் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாடசாலை மாணவர்கள்  பயணம் செய்யும் குறிந்த வீதி  கடந்த 30 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனார்.  

1995 ம் ஆண்டு முதல் 2003 ம் வரை இராணுவத்தின் வசம் இருந்தது அதன் பின்னர் கிராம மக்கள் ஒன்றினைத்து புனரமைத்து பயன்படுத்தி வருகின்றார்கள்  மிக விரைவாக இந்த வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயும் ஐங்கரன் அவர்களிடம் இன்று  கடிதம் மூலம்  கோரிக்கை விடுத்துள்ளனார்.  மிக விரைவாக இந்த வீதியை புனரமைத்து தருவதாக உறுதி வழங்கியுள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு