உயா் நீதிமன்ற தீா்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்..

ஆசிரியர் - Editor I
உயா் நீதிமன்ற தீா்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்..

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பை மீறும் செயல் என உயா் நீதிமன்றம் இன்று மாலை தீா்ப்பளித்த நிலையில் வவுனி யா நகாில் ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளா்கள் வெடி கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனா். 

ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக நான்கரை வருடங்கள் நிறைவு பெறாமல் பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து 

வவுனியா கொரவப்பொத்தான வீதியில் ஐக்கிய தேசியகட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கருணாதாச மற்றும் வவுனியா மாவட்ட ஐக்கியதேசியக் கட்சியின் முகாமையாளர் 

மற்றும் இளைஞரணி தலைவருமான எஸ்.சந்திரகுமார் ஆகியோர் தலைமையில் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி வெளியிட்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு