காட்டு விலங்கு இறைச்சி விற்பனை செய்தவருக்கு சாவகச்சோி நீதிமன்றம் கடுமையான எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
காட்டு விலங்கு இறைச்சி விற்பனை செய்தவருக்கு சாவகச்சோி நீதிமன்றம் கடுமையான எச்சாிக்கை..

யாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்ற வியாபாரியை கடுமையாக எச்சரித்து நீதிவான் 3 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார். 

சாவகச்சேரி மரக்கறி சந்தையில் வியாபரி ஒருவர் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்கின்றார் என கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர் பி. தளிர்ராஜ் 

குறித்த வியாபரியிடம் இருந்து மூன்று கிலோ இறைச்சியை கைப்பற்றினார்.  அதனை அடுத்து நேற்றைய தினம் புதன்கிழமை கைப்பற்றப்பட்ட இறைச்சியையும் , 

குறித்த வியாபாரியையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது வியாபாரி தனது குற்றத்தை  ஏற்றுகொண்டதை அடுத்து வியாபாரியை கடுமையாக எச்சரித்த நீதிவான் 3 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு