மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம்..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம்..

சாரதி அனுமதி பத்திரம் , வாகன வரிப்பத்திரம் , காப்புறுதி பத்திரமின்றி மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு , சாவகச்சேரி நீதிவான் 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளார். 

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபர் குற்றத்தை குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்தே நீதிவான் 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார். 

அதேவேளை சாரதி அனுமதி பத்திரமின்றி , மது போதையில் வாகனம் செலுத்திய மற்றுமொருவருக்கு 11 ஆயிரம் ரூபாய் தண்டமும் , பொலிசாரின் சமிஞையை மீறி சென்ற நபருக்கு 11 ஆயிரம் ரூபாய் தண்டமும் , 

காப்புறுதி பத்திரமின்றி வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 7 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு